Pages

Saturday, February 20, 2010

உலக மகா சனங்களே

உலக மகா சனங்களே
ரொம்ப நாளாவே இத எழுதனும்னு நினைக்கிறது ஆனா முடியாம போய்டும்
தங்கத்தின் தங்கமே பித்தளையின் பித்தளையே இப்படி எல்லாம் மொக்க போடாம ஸ்ட்ரைட் ஆவே மேட்டர்க்கு வரேன்
எனக்கு ஒரு சந்தேகம் மக்களே . இந்த தமிழ் சினிமா ஹீரோஸ்ன்னு சொல்லிக்கிட்டு ஒரு 4 5 பேரு திரியுறானுகளே இவங்கள கேட்க யாருமே இல்லையா
பின்குறிப்பு : இது யாரையும் காயப்படுத்துவதற்காக எழுதப்பட்டவை அல்ல !! அப்படி காயப்படுகிறது என்றால் இனிமே இந்த "ப்ளாக்" பக்கமே தயவு செஞ்சு வந்துடாதீங்க.
கொஞ்ச நாள் முன்னாடி சத்யம் ன்னு ஒரு படம் பார்த்தேனுங்கோ அதுவும் மலேசியால போயி !! அத பார்த்தது அப்புறோம் தான் தெரிஞ்சுது மலேசியா போய் பாக்குற அளவு எல்லாம் வொர்த் கிடையாதுன்னு. சேரி வேறே வழி இல்லை முழு படாத பார்ப்போம்னு உக்காந்து பார்த்தேன் !! அப்போ பிடிச்சதுங்க எனக்கு சனி !! அது எப்படிங்க கிளைமாக்ஸ்ல வில்லன் சுட்டும் இவரு ஒரு மணி நேரம் உடாம பேசிகிட்டு இருப்பார்? அது பொம்மை துப்பாக்கியா என்ன? பாக்குற நமக்கே இவ்ளோ கோவம் வருதுனா தக்காளி அவனை சுட்ட வில்லன் என்ன ஆகி இருப்பான் !! மை டியர் வில்லன்ஸ் இனி நெக்ஸ்ட் டைம் பீரங்கி ஏதும் இருந்தா அத எடுத்துட்டு வந்து சுடுங்க நாட்டு மக்களின் நன்மைக்காக . அப்புறம் பஞ்ச் டைலாக் பேசாம நடிக்கவே மாட்டீங்களா!! சத்தியமா அந்த சாமி வந்தா கூட உங்கள இல்ல எங்களை காப்பாத்தமுடியாது . விஷால் ரசிகர் யாராச்சும் இருந்தா ஒரு கேள்வி : இவர் பொறக்கும்போதே இப்படி தானா இல்லை அம்மாவாசை பவுர்ணமிக்கு மட்டும் இப்படியா?
ஒருத்தன் ஒரு தடவ டார்ச்சர் பண்ணினா அது தப்பா !! தப்பில்லை தான் !! ஒருத்தன் பல தடவ டார்ச்சர் பண்ணினா? லைட்ஆ தப்பு மாதிரி தான் இருக்குது !! ஒரு குடும்பமே பல தடவ பல டார்ச்சர் பண்ணினா ? பெரிய தப்புங்கோ . அத தாங்கோ இப்ப நம்ம TR & சோன்ஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க . கம்பு சி சிம்பு உங்கள எல்லாம் பெத்தாங்களா இல்லை செஞ்சாங்களா . முடியல சாமி !! நீங்க ரெண்டு பெரும் பண்ணிக்கிட்டு இருக்குறது அட்டெம்ப்ட் மர்டர் ! மாஸ் மசாக்ரே ! பி கேர்புல் உங்கள இல்ல சாமி எங்கள தான் சொல்லிக்கிறோம் வேறேவழி ?? அது எப்படிங்க உங்களுக்கு நடிக்க தெரியாதா? அதுதான் ஊருக்கே தெரியுமே? அத ஏன் சாமி டிவி பொட்டில சொல்லி பல்பு வாங்கினீங்க ? சேரி உங்க ஊட்ல என்ன கரென்ட் பஞ்சமோ அந்த பல்பு அஹ வாங்கிபோட்டு தான் விளக்கு எரிஞ்சிருகுமோ ? ஒன்னே ஒன்னு சொல்லுறேனுங்கோ வாயல வாழ்ந்தவன் நெறைய பேருங்க , வாயல கெட்டதுன்னு பர்தா மிஸ்டர் தவளையாருக்கு அடுத்து நீங்க தானுகோ . உங்கப்பா பண்றது ரௌடிசம் நீங்க பண்றது தேர்ரரிசம் . அது எப்படி ஆயிரம் பிளாப் கொடுத்தாலும் அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கே பேசிகிட்டு இருக்கீங்களே , உங்களுக்கே ஓவரா தெரியல? மிஸ்டர் ராசேந்தர் உங்ககிட்டே ஒரே ஒரு கேள்வி : உன் கிட்ட புள்ளைய பெக்க சொன்னா பெருச்சாளிய பெத்து வெச்சு இருக்கே !! சீரழிஞ்சு போனவன பெத்து சிம்புன்னு பேரு வெச்சானாம் . மிஸ்டர் கம்பு உங்ககிட்டே ஒரு கேள்வி நீங்க இப்படி ஆனதுக்கு கரணம் உங்கப்பவா இல்லை இது மாதிரி ஒரு புள்ள பொறக்கும்னு தெரிஞ்சு அந்த எபெக்ட்லையே உங்கப்பா இப்படி ஆகிட்டாரா ?
மாஸ் மாஸ் மரண மாஸ் நீங்க ரெண்டு பெரும் அடிக்கிற காமெடி .. ஆயிரம் கவுண்டமணி வந்தாலும் உங்க காமெடியை மிஞ்ச முடியாது
அடுத்து நம்ம சின்ன தளபதி பரத் !! தம்பி உனக்கு நான் என்னப்பா துரோகம் பண்ணினேன்? அந்த முனியாண்டி படம் பாத்துட்டு வந்து பத்து நாள் ஆஸ்பத்திரில இருந்தேன் . சோறு தண்ணி இறங்கல !! அந்த படம் நடிச்சதும் நீயே போட்டு பார்தியப்பா !! பார்த்து இருந்தா நீ இந்நேரம் கீழ்பாக்கம் ல அட்மிட் ஆகி இருப்பே !! ஐயோ சாமி ஏன் போதாத நேரம் இந்த அப்டதையும் மலேசியால போய் தான் பார்த்தேன் !! முடியல தியேட்டர்அ விட்டு ஓடி வந்ததுல போர்டர் கூட கண்ணு தெரியாம சிங்கப்பூர் வந்து சேர்ந்தேன் தலைவரே . வாழ்க்கைல எங்கயாச்சும் எப்பவாச்சும் லாஜிக் "அப்டின்னு கேள்வி பட்டீங்கனா எசமான் தயவு செஞ்சு பார்த்து அடுத்த அடுத்த படத்துல பண்ணி விடுங்க !! பவம் நாங்க எல்லாம் புள்ள குட்டி காரவுங்க !! அப்புறம் அந்த படம் பழனி சத்தியமா அந்த அப்தம் பார்த்தப்ப இந்த ஆளு வர்ற சீன்ல எல்லாம் " தம்பி டீ இன்னும் வரல "அப்டின்னு தாங்க சொல்ல தோணுது . எங்க உங்களுக்கு இந்த வேலை . நாட்ல பட்டினி பஞ்சம் வந்தாலும் உங்க பஞ்ச் டைலாக்க்கு மட்டும் பஞ்சமே வராதுங்களா?

4 comments:

  1. இத்தோட ஏன் பதிவை நிறுத்தி கொள்கிறேன் மீண்டும் சந்திப்போம்

    ஆக்கம், எழுத்து : வசந்தன் மோகன் என்கிற வாசு

    ReplyDelete
  2. hahaha! wat a post from ur heart.. :D

    ReplyDelete
  3. po po poi.. velaiya paaru..

    neeye poi padatha pakurathu.. apuram ayio amma nu alara vendiyahu.:D

    kalikalam da saaami..!!

    ReplyDelete
  4. yen neenga ellam alalayaa padam aprthuttu?

    ReplyDelete