Pages

Thursday, August 5, 2010

> Who am I? >

Who am i?

May be am the one who have touched ur heart very closely and or may be am the one hu have strucked ur mind severely.

I never disclosed my myself, bcoz
Never explain yourself. Your friends don't need it and your enemies won't believe it


Have u ever seen a kid's ecstasy after getting the chocos from its long cry?

Have u ever smelt the smell of ground before rain?

Have u ever cried in the lonely nights?

Have u ever spent ur whole busy day with ur close ones?

Have u ever ditched by some close ones?

Have u ever conversed with twinkling stars in the terrace?

Have u ever worried for someones pain?

Have u ever noticed some one striving for food? Have u ever helped them?

Have u ever enjoyed ur silence?

Have u ever smiled to some anonymous?

Have u ever regret for hurting ur someone?

Have u ever annoyed urself?

Sometyms i have look funny, sometyms i may seems to be very crazy! I kno wat am, I kno whr am. Am here to live my OWN LYF, not others! so plz............. !! I have some own identity ! I dnt want to lose that unless until it hurtz some REAL ONES !!Am going in my way!Alone, alone, alone all the way !



I have no fear of being alone/ walking alone! But still my fear is r u peepz r safe?
I neva worried for this lonely lyf! But my concern is will it be safe widout me!

Seriously Nobdy knows wat am thinking, wat am telling! Most of the peeps know ma smiling face only ! Most of the peeps kno ma violent action only ! lol ! But seriously this is not real at all the tyms!

Life moulded me ! These changes are irrespective of ma woe! Juz i have adapted, coz i was forced to do so! I have hurted so may in my past lyf !I have made them cry !
I dunno how am going to compensate those immatured things! Seriously I have no ego to ask them sorry for what i have done! But those things wnt vanish coz of my sorry!

I have backstabbed by soneones. I have ditched by fewone!

When i start to rationalise/realize abt life, the first thing comes in my mind is " God Shld be crazy" . Am either atheist, nor a theist ! I was a theist in my past life ! Now am a least bothered wheather he is existing or non existing!

I have one kosteen! Acc to newtons third law "Every axn has an equal and opp reacn" God is existing coz of devils or devils are existing bcoz of god?
lol! nothing offense i meant! some cranky thinkings ;)

I have some ambitions or goals! I will alive/boast here until achieve that!

Life is teaching me the lesson! am also learning day by day! I dunno how its gng to treat me! Anyhw some of ma char i wnt change ! My one and only wish is i have to accomlish wat am dreaming for so long years :)

If u e theist do prya for me, if u r an atheist do wish me :).

Wednesday, March 31, 2010

முட்டாள்கள் தினம்


"The first of April is the day we remember what we are the other 364 days of the year. " - Mark Twain.

-என்று நம்மைப்பற்றி முன்பே உரத்துச் சொல்லிவிட்டார்.

"முட்டாள்கள் தினம்" ஏப்ரல் 1ம் தேதி உலகமெல்லாம் முட்டாள்களாக்கும் முயற்சி நடைபெறுகிற ஒரு முட்டாள் நாள் என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம்தான். இதை யார் துவக்கி வைத்தது? இதற்கு ஒரு ஆரம்பம் இருந்தாக வேண்டுமே. இருந்தது உண்மைதான்!

முட்டாள்கள் தோன்றிய வரிசை என்று பார்த்தால், பிரான்சு முதலாவதாக , இரண்டாவதாக இங்கிலாந்து, மூன்றாவது மெக்ஸிக்கோ அடுத்து சுவீடன், இந்தியா என்று பட்டியல் ஒரு ரவுண்ட் உலகம் சுற்றி வரும். காலம் தன் தேய்பிறை நாட்களில் உண்மையை முழுவதுமாக மறைத்து விடவில்லை.

அன்றைய ரோமானிய நாட்காட்டியின்படி ஏப்ரல் 1ம்தேதி பொழுது புலர்ந்து பூபாளம் பாடுகிற வேளை தான் வசந்தம் துவங்குகிற பொன்னாள்.இது கி.பி.154க்கு முன்பிருந்து பொதுமக்களால் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை.

புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.

இந் நாளில் கடவுளுக்கு பலி செலுத்தும் பழக்கமும் காணிக்கைகளைச் செலுத்தும் வழக்கத்தையும் கொண்டிருந்தனர். ஆடல், பாடல், நடனம் என்று கலை நிகழ்ச்சிகளில் மூழ்கி தங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திக் கொண்டனர். இது எதிர் வரும் புத்தாண்டைச் சிறப்பாக வரவேற்கும் வகையான நிகழ்வின் வெளிப்பாடாகக் கருதப்பட்டது. மகிழ்ச்சி பொங்கும் வாழ்க்கை நிலவிட வழிபாடுகளை மேற்கொண்டனர்.

ஹார்வி என்னும் வரலாற்றாய்வாளர் தனது குறிப்பில், "பிரான்சு தேசத்தின் அரசன் ஒன்பதாம் சார்லஸ் காலத்தில் மார்ச் மாதம் 25ம்தேதியிலிருந்து ஒருவார கால புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார்.

திருவிழாவைப்போல் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களின் போது ஒருவருக்கொருவர் பரிசுப் பொருள்களையும், அன்பளிப்புகளையும் வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டதாக குறிப்பிடுகிறார். இந்த ஒரு வாரக் கொண்டாட்டத்தின் இறுதி நாளான ஏப்ரல் ஒன்றாம் தேதி பெரு விருந்துடன் புத்தாண்டு விழா நிறைவெய்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

16ம் நூற்றாண்டில் பிரான்சு தேசத்தில் துவங்கியது இந்தப் பழக்கம். 1500களில் ஆண்டுத் துவக்க நாளாக ஏப்ரல் 1ம் தேதியையே கொண்டிருந்தனர். 1562ம் ஆண்டில் போப் கிரகோரி புதிய ஆண்டுத் துவக்கத்தை நடைமுறைப் படுத்தும்படி அறிவித்தார்.

ஆண்டுத் துவக்க நாளாக சனவரி 1ம்தேதியை அறிமுகம் செய்து வைத்தார். இனி மேல் பிரான்சு தேசம் முழுமையும் இந்த நாட்காட்டிதான் என்று ஊர்தோறும் அறிவிக்கப்படது. இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது போப்பின் அறிவிப்பை நம்பாதவர்கள் ஏப்ரல் 1ம்தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர்.

ஏப்ரல் 1ம்தேதியைக் கொண்டாடியவர்களை கேலியும் கிண்டலும் செய்ததோடு அவர்களை நூதனமாக ஏமாற்றி "ஏப்ரல் முட்டாள்கள்" (April Fool) என்றழைக்கவும் செய்தனர். நள்ளிரவு தாண்டியும் நாட்டிய நடனங்களில் ஈடுபட்டு மிகுந்த மகிழ்ச்சிகரமாக இருந்திருக்கின்றனர்.

ரோமாபுரி... ரோமாபுரியில் கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வந்தபோது, நடைமுறைகளை மாற்றினார்கள். தற்போதுள்ள ஈஸ்ட்டர் பண்டிகையினையும் மாற்றி அறிவித்தார்கள். பழமையான கொண்டாட்டங்களை மாற்றியதோடு அவற்றில் ஒரு சிலவற்றை வேடிக்கை வினோத கொண்டாட்டங்களுக்குரிய நாளாக மாற்றினர். இந்த மாற்றங்களில் நம்பிக்கை இல்லாமலிருந்த இவர்களை கேலியும் கிண்டலும் செய்து விளையாட்டாக முட்டாளாக்கி ஏமாற்றும் போக்கில் ஈடுபட்டனர். இதுவே நாம் இன்றைக்கு வேடிக்கையாய் முட்டாள்களாக்கி மகிழ்கிற நாளாக தொடர்ந்திடுகிறது எனலாம்.

சனவரி மாதம் 1ம் தேதியை புத்தாண்டாக ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள் அல்லது மறந்தவர்களுக்கு முட்டாள்தனமான பரிசுகளை அனுப்பினர். பெரிய பரிசுக் கூடைகள் போன்று வடிவமைத்து உள்ளே குதிரை முடி, பழைய குப்பை என்று நிரப்பிக் கொடுத்து ஏமாற்றுதல் போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்து ஏமாற வைத்தனர். இதை நம்பும்படியான ஆனால் நகைக்கும்படியான செயலாக செய்து மகிழ்ந்தனர்.

ஏப்ரல் முதல் நாளை, "Poission d'avril " என்று அழைத்துள்ளனர். இத்தகைய கேலிக் கூத்துக்கள் சுற்றிச் சுழன்று பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்காவுக்கும் ஏப்ரல் ·பூல் விரிந்து பரவி இருக்கிறது. இது குறித்து சிகாகோவில் உள்ள இல்லிநாய்ஸ் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் ஸ்டீவன் ·பேன்னிங் ஐரோப்பாவில் எப்படி எல்லாம் நடந்தது என்று விலாவாரியாகக் குறிப்பிட்டுள்ளார். கிரகோரியன் காலண்டரை ஏற்றுக் கொண்ட முதல் நாடாக பிரான்சு இருந்தாலும் இத்தகைய கேளிக்கைகளின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கப் போதுமான ஆதாரக் குறிப்புகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்."

நெப்போலியன் I , ஆஸ்திரியாவைச் சேர்ந்த மேரி லூயிஸை 1810-ல் திருமணம் செய்துகொண்டார். அந்த மாதம், நாள் ஏப்ரல் 1 என்பதால் மணமகளை கேலி செய்து இருக்கின்றனர். நெப்போலியன் உண்மையாகத் திருமணம் செய்யவில்லை. உன்னை முட்டாளாக்கவே திருமணம் செய்திருக்கிறார் என்று எள்ளி நகையாடியதாகக் கூறப்படுகிறது.

ஸ்காட்லாந்தில்

"April Fool's Day"யை, "April Gawk" என்று கடைப்பிடித்ததாக பேராசிரியர் ஸ்டீவன் தெரிவித்துள்ளார்.

அதாவது ஏப்ரல் 1ம் தேதி வினோதமாக உடையுடுத்தி ரெண்டுங்கெட்டானாக நடந்து கொண்டு ஸ்காட்டிஷ் மக்கள் அந்த நாளை நகர்த்தியதாக மேலும் தெரிவிக்கிறார். ஒரு பொய்யை உண்மை என்று நம்ப வைப்பது, ஒரு கடிதத்தில் அவசரம் என்று மேலே எழுதி உள்ளே முட்டாள், "இன்று ஏப்ரல் ·பூல் தினம் தெரியுமா? அது வேறு யாருமில்லை நீதான்," இப்படி எழுதி அனுப்புவதை வழக்கமாகச் செய்திருக்கின்றனர்.

"ஏப்ரல் மீன்" பிரெஞ்சுக் குழந்தைகள் கூட காகிதத்தில் மீன் போன்று செய்து தனது சினேகிதர்களின் முதுகில் ஒட்டி அனுப்பிக் கேலி செய்திருக்கின்றனர். இப்படி முதுகில் மீனோடு திரிகிற குழந்தைகளைப் பார்க்கும் குழந்தைகள் "ஏப்ரல் மீன்" என்று அழைத்துக் கேலி செய்திருந்திருக்கின்றனர்.

அமெரிக்காவில்...

அமெரிக்காவில் "April Fool's Day" அல்லது "All Fool's Day" என்று அழைக்கிறார்கள். சாதாரணமாக ஒரு நண்பர் இன்னொரு நண்பரை திடீர் என்று, "ஒன்னோட ஷ்லேஸ் அவிழ்ந்து தொங்குது பார்" என்றோ முதுகுப் பக்கம் கோட்டுல ஏதோ ஒரு கறை அசிங்கமா இருக்கு, மொதல்ல அதைக் கழட்டு என்று சொல்லி ஏமாற்றுவார்கள். 19ம் நூற்றாண்டில் ஆசிரியர்களே மாணவர்களிடம் அங்க மேல பாருங்க பொம்மை கூஸ் பறக்குதுன்னு சொல்வாங்களாம். (நம்ம ஊர்ல வெள்ளைக் காக்கா பறக்குதுன்னு சொல்வோமே..!) மாணவர்கள் சக மாணவர்களைப் பார்த்து இன்னைக்கு ஸ்கூல் லீவு தெரியுமா? அப்படின்னு சொல்லுவார்கள். எது எப்படியோ அவர்கள் ஏமாந்தவுடன் ஹை..... எப்ரல் ·பூல் என்று சொல்லி குதூகலித்துக் கொள்வது என்ற அளவில் தான்.

ஏமாற்றலுக்கு ஏமாற்றல் என்றும் நடப்பதுண்டு. சர்க்கரைச்(சீனி) சாடியில் உப்பைப் போட்டு ஏமாற்றுதல், மணிப் பர்ஸில் ஒரே ஒரு பென்னியை வைத்து ஏமாந்தாயா முட்டாள் என்று எழுதி நண்பர்களை ஏமாற்றுதல் சகஜமான ஒன்று. கல்லூரி மாணவர்கள் தங்கள் விடுதிகளில் ஒரு மணி நேரத்தை பின்னோக்கி வைத்து குறிப்பிட்ட வகுப்புகளுக்குப் போக விடாமல் செய்வது; அல்லது வரலாறுக்குப் பதிலாக உயிரியல் வகுப்புக்குச் செல்ல வைப்பது; ஆனால் யாருக்கும் தீங்கிழைப்பது இல்லை; ஏமாற்றலுக்குப் பழி வாங்குதல் என்று இன்று வரை நடந்தது கிடையாது என்றே சொல்ல வேண்டும். ஆங்காங்கே முட்டாள்தனமான ஜோக்குகளைச் சொல்லி விலா எலும்பு நோகச் சிரிக்க வைத்தல் போன்றெல்லாம் நடக்கும்."

மெக்சிக்கோ...

மெக்சிக்கோவில் பாரம்பரியமான முட்டாள்கள் தினத்தைக் கொண்டாடினாலும் இங்கு அது வேறு நாளில் வேறு காரணங்களுக்காகக் கொண்டாடப்படுகிறது. "El Dia los Inocents " என்று டிசம்பர் 28ம் தேதி பச்சிளம் பாலகர்களுக்காகக் கொண்டாடப்படுகிறது. அதிர்ஷ்டமற்ற நாட்கள் என்று முட்டாள்களாக்கப் பட்டவர்கள் கருதுகிற சூழலை பத்திரிக்கைகள், வானொலி, தொலைக் காட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு செய்திகளை வழங்குகிறது.

திரைப்படம்...

1986-ல் ·ப்ரெட் வால்டன் இயக்கிய, "ஏப்ரல் பூல்ஸ் டே" திரைப்படம் மிகப் பிரபல்யம் ஆனது. டெபோரா ·போர்மேன், ஜேய் பேக்கர், டெபோரா குட்ரிச் நடித்திருந்தனர். பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தார் பிரம்மாண்டமாக தயாரித்திருந்த இப்படம் ஒளி நாடாக்களிலும் வீர நடை போட்டு வந்ததை குறிப்பாகச் சொல்லலாம்.

Thursday, March 25, 2010

ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி?

நம்ம தோழி ஒருத்தரு புதுசா வேலைக்கு சேர்ந்துருக்கேன் வாசு என்று நமக்கு சந்தோசமா மெயில் தட்டி உட்டுருந்தாரு. அதுக்கு பாராட்டலாமேன்னு நானும் ஒரு phone ஐபோட்டு ‘என்னாமா கண்ணு எப்படி இருக்கு புது வேலை எல்லாம்?’ ன்னு கேட்டதுதான் போதும் அவ்ளோதான் ‘வாசு வேலை எல்லாம் ஜுஜுபிதான் !
(அவுக நம்மளை மாதிரி இல்லைங்கோ! நெசமாவே கொஞ்சம் மூளைக்காரவுகதான்!) ஆனா இந்த சீனியருக தொல்லை தான் தாங்கமுடியலை! அப்பபோ அதைய சொல்லுறேன் இதையக் கேக்குறேன்னு வந்து வழியறதைத்தான் எப்படி சமாளிக்கறதுன்னு தெரியலைன்னு !” பூத்து பூத்துன்னு ஒரே அழுவாச்சி ! நமக்குத்தான் ரொம்ப இளகின மனசாச்சே !! அதுவும் இப்படி தாய்குலங்கள் கண்ணீரும் கம்பலையுமா இருக்குறதைப்பார்த்தா மனசு தாங்குமா சொல்லுங்க? அப்படியேக்கா மனசுலே ஒரு ரெண்டு ‘டன்’ பாரம் ‘லோட்’ ஆயிடுச்சு !!

அட இது நம்ம தோழிக்குக்கு மட்டுமா பிரச்சனை ? வெளியே வேலைக்குப்போற நம்ம எல்லா தாய்க்குலங்களுக்குமே உள்ள பிரச்சனை தானே ! எப்படி இந்த மெகா ஜொள்ளு பார்ட்டிகளை சமாளிக்கறதுன்னு ஏதோ நம்மாளான ஐடியாக்களை அள்ளித்தெளிச்சா என்னான்னு தோணுச்சு. இதோ களத்திலே குதிச்சிட்டான் இந்த
வாசு!! நம்ம அம்மணிக எல்லாருக்கும் கோடுபோட்டா போதுமே! தானாவே ரோடு போட்டுருவாங்க. ஓகே அம்மணீஸ்? ஜொள்ளர்களை பல பிரிவா பிரிச்சு மேய்ஞ்சு மகளிர்க்காக ஜடியாக்களை சுடச்சுட அள்ளித் தருவது உங்கள் Vasu !!

ஒட்டக ஜொள்ளுப்பார்ட்டி:

இந்த மாதிரி ஆளுக எல்லாம் பார்தீங்கன்னா தானாவே வலிய வந்து உங்களுக்கு உதவி செய்யற மாதிரிதான் ஆரம்பிப்பாங்க. ‘அட இப்படி ஒரு ‘லாஜிக் லபக்குதாசா?!’ இருக்கானே! கேக்காததுக்கு மின்னாடியே நமக்கு உதவி செய்யுறானே ! இவன் ரொம்ம நல்லவனா இருப்பான் போல இருக்கேன்னு ‘நம்பி’ ஒரு ரெண்டே ரெண்டு மில்லிமீட்டர் அளவுக்கு உங்க ‘பல்லை’ காட்டினா போதும் அவ்வளவுதான் ‘ எக்ஸ்கூஸ் மீ மே ஐ கம் இன் !’ அப்படீன்னு உங்க பக்கத்திலேயே வந்து பகிரங்கமா ‘டென்டை’ போட்டுருவாய்ங்க! அப்படியேக்கா ஒரு ரெண்டே நாள்ல உங்ககிட்டே ‘ கொஞ்சம் தள்ளி உக்கார முடியுமா ? இடம் பத்தலை?! ‘ அப்படீன்னு கேப்பாய்ங்க. நீங்களும் ‘பேத்தனமா’ உங்க ‘சேர்’ ரை நகர்த்தி போட்டு உக்கார்தா உடனே ‘ அட என்னங்க நீங்க? உங்களைத்தானே நாகர்ந்து உக்கார சொன்னேன் chair ஐ இல்லையேன்னு ! “ அப்படியேக்கா லேசா உங்க முகத்தை படிச்சு பதமா ‘பல்ஸ்’ பார்ப்பாய்ங்க. அப்போ மட்டும் நீங்க ‘கெக்கே பிக்கே’ ன்னு பெரிய ‘ஜோக்’ கை கேட்ட மாதிரி இளிச்சுட்டீங்கன்னு வைங்க! அவ்ளோதான் நீங்க காலி !! வாரண்ட் இல்லாமலேயே உங்க மடியிலேயே வந்து பூனை மாதிரி பதுங்கீடுவாய்ங்க ஜாக்கிறதை !


வாத்தியார் ஜொள்ளுபார்ட்டி :

இந்த மாதிரி ஆளுக எல்லாம் பார்த்தீங்கன்னா கொஞ்சம் ‘கெத்’ து மெயின்டெய்ன்’ பண்ணிகிட்டு இருப்பாய்ங்க. ஆரம்பதுலே அப்படியே கஞ்சி போட்டு அயர்ன் பண்ணுன கதர்சட்டை மாதிரி சும்மா வெரப்பா ( ரொம்ப ஸ்ரிட்டாம்! ) சுத்திகிட்டு இருப்பாய்ங்க. உங்களை அப்படியேகா லேசா ஓரக்கண்ணுலே ‘மானிட்டர்’ பண்ணிகிட்டே இருப்பாய்ங்க. நீங்க எப்பவாசும் ஏதாசும் ‘சந்தேகம்’ இல்லை ‘வெளக்கம் ‘ அப்படீன்னு கேப்பீகளான்னு காத்துகிட்டு இருப்பாய்ங்க. ஆனா வெளிய காட்டிக மாட்டாய்ங்க! நீங்களும் அட நம்ம அப்பாவாட்டம் இருகாரேன்னு நம்பி நம்பிக்கையோட போய் பேசுவீங்க. இந்த மாதிரி பார்ட்டிக எல்லாம் ‘ என்னமா கொழந்தே ! ‘ அப்படின்னுதான் மங்களகரமா ஆரம்பிச்சு ‘ அட இந்த தோடு நல்லா இருக்கேன்னு! ‘ ரொம்ப உரிமையோட உங்க காதை தடவுவானுங்க! இப்போ நீங்க உஷாரில்லாம கேனை மாதிரி ‘ சார் நல்லா இருக்கா ! ‘ஜில்மில்’ ல வாங்கினேன்னு இன்னோரு காதையும் காட்டிகிட்டு நின்னீங்கனா போதும் பார்ட்டி அப்படியே வேறெங்கேயெல்லாம் தடவுலாம்னு மனசுகுள்ளே புதுசா ரெண்டு ‘ப்ராஜெக்ட்’ போட ஆரம்பிச்சுடுவாய்ங்க ஜாக்கிரதை!!


திருவோடு ஜொள்ளுப்பார்ட்டி :

இந்த ‘கேட்டகரி’ ஆளுக பார்த்தீங்கனா பிச்சக்காரன் சுடசுட பிரியாணியை பார்த்த மாதிரி உங்களை அப்படி ஒரு பார்வை பார்ப்பானுங்க. அடிக்கடி பக்கத்துல வந்து உங்களைக் கண்ணாலயே தின்னுட்டு பக்கத்து ‘சீட்’ ஆளுகிட்டே அல்பத்தனமா ‘ஜோக்’ அடிச்சுகிட்டு உங்க வாயும் ‘இளிச்ச’ வாயா ஆகுமான்னு நோட்டம் விட்டுகிட்டே இருப்பாய்ங்க! கவலையே படாம நீங்க கதறக் கதற ஜொள்ளுவிடுறது இவனுங்க ஸ்பெஷாலிட்டி. இந்த பிரிவு ஜொள்ளு பார்ட்டிக தான் உங்க பொருமையோட எல்லைய ‘டச்’ பண்ணுறதே ஒரு பெருமையா நெனச்சுகிட்டு கபடி ஆடுவானுங்க. கூடிய மட்டும் இந்த ஆளுகள பார்க்குறப்பொ எல்லாம் பொணம் கணக்கா எந்த ஒரு ‘ரியாச்சன்’ னுமே காட்டாம தேவாங்கை பார்க்குற மாதிரி ஒரு ‘டெட் லுக்’ வுட்டு இருந்தீங்கன்னாதான் பொளச்சுக்குவீங்க. இல்லாட்டி அவ்ளோதான் சும்மா சுனாமி கணக்கா ஜொள்ளை கண்ணாபினான்னு வாரி இரைச்சு உங்களை நாறடிச்சுடுவானுங்க ஜாக்கிறதை !!


அப்பாவி ஜொள்ளுபார்ட்டி :

இந்த மாதிரி ஆளுக எல்லாம் பார்த்திங்கண்ண இந்த ‘காதல் கொண்டேன்’ தனுஷ் மாதிரி பரிதாபமா கையைக் கட்டிகிட்டு குனிஞ்ச தலை நிமிராம உங்க முன்னாடி ‘மார்ச் பாஸ்ட்’ போவாய்ங்க ! அட என்னடா இது இவ்ளோ கூச்ச சுபாவமா இவனுக்கு?! குனிஞ்ச தலைய நிமிரவே மாடேங்கறானே !! இவ்ளோ அப்பாவியா இருகானே! ன்னு நம்பி ஏதோ ரெண்டு வார்தை நீங்களா பேசுனீங்கன்னு வைங்க உடனே ‘ உங்களை நிமிர்ந்து பார்த்து ரேசன் மாதிரி எண்ணி எண்ணி நீங்க கேட்ட கேள்விக்குமட்டும் ரெண்டு வார்த்தையிலே பதில் செல்லிட்டு போவாய்ங்க. அட ரொம்ப ‘கட் அண்ட் ரைட்’ டான ஆளா இருப்பான் போல இருக்கேன்னு நீங்களும் நம்பி நம்பிக்கையோட இருந்தீங்கன்னா அவ்ளோதான். நீங்க போறப்போ வர்றப்போ எல்லாம் லேசா நிமிர்ந்து பாக்குறது ‘சைடு’ல பார்க்குறதுன்னு லேசா நம்மாளுக்குள்ள காதல் உடுக்கை தரிகெட்டு அடிக்க நீங்க காரணமா இருப்பீங்க. இந்த கேட்டகரி ஜொள்ளு எல்லாம் பாவங்க. நீங்களா போய் சும்மா இருக்குறவங்க நெஞ்சுல காதலை பெட்ரோல் ஊத்தி பத்தவசுடாதீங்க !!

Thursday, March 18, 2010

போராளி

பார்த்துவிட்ட கண்கள்
மறக்க துடிக்கும் இமைகள்
தினம் தினம் போராட்டம்
நானும் ஓர் போராளி தான்

எச்சரிக்கை

எச்சரிக்கை என்று எழுதவும்
உன் கண்களுக்கு நடுவில்
இதயங்கள் மோதிக்கொள்ளும்
விபத்து பகுதி அது

எந்தை

கருவறையில் ஒளிந்த எனை
வீட்டின் முகப்பறைக்கு கொண்டு வந்தாய்

பொய்கள் பல சொல்லினும்
புன்னகை மாறா உந்தன் முகம்

லெனினும் கம்யுனிசம் விளக்கிய நீ
திரும்வெம்பாவை சொல்லியது என்னுள் ஆச்சர்யமே

துயரங்கள் நான் தந்தபோதும்
தோழமையாய் உந்தன் கரம்

தோல்விகள் நான் கண்டபோது
தோழானாய் நீ நின்றாய்

என் கைக்குட்டைகள் அறியா கண்ணீர்கள்
உன் மடி நனைத்தது நிஜம்

செயற்கரிய செய்துவிட்டு
சிந்தனையுடன் நீ நிற்பாய்

உன்னை நான் பார்த்த நாட்களை விட
அதிசயித்து பார்த்த நாட்களே அதிகம்

உன் பிம்பமாய் நான் நின்றபோது
எனக்கே என்னுள் பெருமிதம்

என் துயரங்கள் சோகங்கள் தாங்க
தோழானாய் தோள் கொடுக்க
ஈரேழு ஜென்மம் எடுத்தாலும்
எந்தையாய் வந்துவிடு

Tuesday, March 16, 2010

தொட்டுவிடுவேன் என்றா
தூரம் போய்விட்டாய்
எட்டி விடும் தூரத்தில்
தான் உன் நிழல்
நிழலோ நிஜமோ
ஒரு முறை காட்டிவிடு
உன் முகத்தை
என் கண்கள் மறந்துவிடும்
இரவு தூக்கத்தை