Pages

Thursday, March 18, 2010

எந்தை

கருவறையில் ஒளிந்த எனை
வீட்டின் முகப்பறைக்கு கொண்டு வந்தாய்

பொய்கள் பல சொல்லினும்
புன்னகை மாறா உந்தன் முகம்

லெனினும் கம்யுனிசம் விளக்கிய நீ
திரும்வெம்பாவை சொல்லியது என்னுள் ஆச்சர்யமே

துயரங்கள் நான் தந்தபோதும்
தோழமையாய் உந்தன் கரம்

தோல்விகள் நான் கண்டபோது
தோழானாய் நீ நின்றாய்

என் கைக்குட்டைகள் அறியா கண்ணீர்கள்
உன் மடி நனைத்தது நிஜம்

செயற்கரிய செய்துவிட்டு
சிந்தனையுடன் நீ நிற்பாய்

உன்னை நான் பார்த்த நாட்களை விட
அதிசயித்து பார்த்த நாட்களே அதிகம்

உன் பிம்பமாய் நான் நின்றபோது
எனக்கே என்னுள் பெருமிதம்

என் துயரங்கள் சோகங்கள் தாங்க
தோழானாய் தோள் கொடுக்க
ஈரேழு ஜென்மம் எடுத்தாலும்
எந்தையாய் வந்துவிடு

No comments:

Post a Comment