வாழ்க்கைல எவ்வளவோ நொந்த அனுபவம் இருந்தாலும் என்னோட பேரே எனக்கு நொந்த அனுபவமா ஆனது தான் கொடுமை வெச்சாலும் வெச்ச பேரு ”அடலேறு”னு நம்ம மக்களோட அழிச்சாட்டியம் தாங்க முடியல..
தொலைபேசி உரையாடல் -1
நான்:ஹலோ கேஸ் ஏஜன்சியா?
எதிர்முனை:ஆமாங்க, நீங்க யார் பேசறீங்க?
நான்:அடலேறு பேசறங்க…
எதிர்முனை: என்ன அடையாறுல இருந்து பேசறீங்களா?
நான்: இல்லங்க என் பேரு அடலேறு..
எதிர்முனை:என்ன அடலொரு ஆ..
(டென்சஹனாகி என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாய் இருக்க)
அலோவ் அடலொரு சொல்லுங்க , எந்த ஏரியா நீங்க?
நான்:நான் கோடம்பாக்கம் ..,வீட்ல கேஸ் தீந்துருச்சு அதான் போன் பன்ன
எதிர்முனை:முன்னாடி அடையாறுனு சொன்னீங்க..
நான்:இல்லங்க அது எம் பேரு..
எதிர்முனை:அடையாறுனு பேரா ?
நான்:இல்லங்க அடலேறு தான் என் பேரு.
எதிர்முனை:சரி அடலொரு வீட்டு அட்ரெஸ் சொல்லுஙக…
என் பெயரை தப்பாக சொன்னால் கூட பரவாயில்லை அவர் ஒரு பெயர் படுகொலையை அரங்கேற்றி கொண்டிருந்தார்.
இதுக்கு மேல என் பெயரை ஒருவர் கொலை செய்வது பொருக்க முடியாமல் ஏதும் சொல்லாமலேயே ரிசீவரை வைத்து விட்டேன்.
எதிர்முனை:அலோவ் அலோவ் அலோவ்வ்வ்வ்வ்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment