வீசி போன அவளின்
சுவாசம் கண்டு உயிர்தெழுந்தது
என் காதல்
நிழலா நிஜமா
புரியும் முன்பே கரைந்துபோனது
அவளின் பிம்பம்
புரிந்தும் புரியாமலும் அவள்
உதிர்த்த புன்னகை நான்
காணும் முன்னே கடந்து விட்டது .
கைபிடித்து விரல் கோர்த்து
முகம் புதைத்து தோள் உரசி
கூந்தல் முகர்ந்து
கடந்த நாட்களை காலத்திடம் கேட்கிறேன்
ஏளன பார்வையுடன் எள்ளி நகைக்கிறது
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment