இரக்கம் இல்லாத இரவுகளுகாக:
இரவுகளே போய்விடுங்கள்
அந்தி சூரியனை அணைத்து
விட்ட இறுமாப்பு வேண்டாம்
என்னவள் முகம் காணா கதிரவனும்
கரைந்து விட்டான் என்னை போல்
காதலின் துயரமறியா இரவுகளே
பூக்களை பார்த்தவுடன் உன் புன்னகை
என்னவள் எதிர் பட்டால்
என்ன ஆகும் உன்நிலை?
சரசங்கள் வேண்டாம் சல்லாபங்கள் வேண்டாம்
என் உச்சரிப்பும் எச்சரிப்பும் உனக்கு தான்
உன் சிரிப்பும் புன்னகையும்
இன்னும் எவ்வளவு நேரம்
வைகறை வரும் வரை தான்
உன் கேலி பேச்சு என்னிடம் வேண்டாம்
வருத்தத்தில் வாடி விட்டேன்
விநாடிகளை எண்ணி கொண்டு இருக்கிறேன்
விடிந்ததும் உன் ஆட்டம் சொல்லி விடுவேன்
மறப்பேன் என்று நினைத்தாயா
என்னவள் எழுந்து விட்டால்
முடிந்து விடும் உன் ஆட்டம்
என்னவள் துயில் களையும் நேரமிது
இறுமாப்பு வேண்டாம் - கரைந்துவிடுவாய்
என்னவள் கண்ணசைவில்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment